தியத்தலாவ விமானப்படைத்தளத்தில் இல 01 மோப்பநாய்க்களுக்கான வெடிபொருட்கள் கண்டறிதல் போதைப்பொருள் ,மோப்பம் செய்தல் பயிற்சி நெறி நிறைவு.
4:04pm on Tuesday 15th September 2020
நெதர்லாந்து நாட்டில் இருந்து  கொண்டுவரப்பட்ட   விமானப்படை மோப்பநாய்களுக்கான  01 வது வெடிபொருட்கள்  கண்டறிதல் போதைப்பொருள் ,மோப்பம் செய்தல் பயிற்சி நெறி  கடந்த 2020 ஆகஸ்ட் 28  ம் திகதி  வெற்றிகரமாக  நிரைவு செய்யப்பட்டது.

இந்த பயிற்சிநெறி மார்ச் 06 ம்  திகதி முதல் ஆகஸ்ட் 27  வரை  இடம்பெற்றது.

இலங்கை  விமானப்படை மோப்பநாய்க்களுக்கான  வெடிபொருட்கள்  கண்டறிதல் போதைப்பொருள் ,மோப்பம் செய்தல் பயிற்சி  இருப்பதால், விமானப்படை மோப்பநாய்க்களுக்கான  பயிற்சி தொடர்பாக புதிய திறன்களைக் கொண்டுவருவதற்காக விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களின்  பிரத்யேக ஆலோசனைக்கு அமைய  இந்த பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாடநெறிகளுக்கு  இலங்கை போலீஸ் கென்னல் பிரிவு மற்றும் இலங்கையின் தேசிய ஆபத்தான போதைப்பொருட்கள்  கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளின் உதவியுடன் தரைவழி செயற்பட்டு பணிப்பக்கம்  மற்றும் பயிற்சி பணிப்பாளர் ஆகியோரின் ஆதரவில்  இந்த பாடத்திட்டம்  ஒருங்கிணைக்கப்பட்டது .

முதல் கட்டமாக  விமானப்படையில்  கடமைபுரியும்  சிரேஷ்ட 20 மோப்பநாய்களுக்கு  இந்த பயிற்சிகள்  அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சிநெறி  நிறைவு வைபவத்தில்  தியத்தலாவ  விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  சமிந்த விக்ரமரத்ன  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  மேலும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர் . இதன்போது  மோப்பநாய்களுக்கான   மோப்பத்தன்மைபற்றிய  பரீட்சனையும் நடத்தப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை