இலங்கை விமானப்படை சர்வதேச தென்னை தினத்தை கொண்டாடியது.
சர்வதேச  தென்னை   தினம் 1998 ம் ஆண்டு ஆசிய பசுபிக் தென்னை   சம்மேளனத்தினால் 25  அமைச்சர்கள் ஊடக  நிறுவப்பட்டது   இது இப்போது  சர்வதேச  தென்னை   சம்மேளனம் என்று அழைக்கப்படுத்துகிறது  இது 1969 ம் ஆண்டு  நிறுவப்பட்டது.

சர்வதேச  தென்னை சம்மேளன 18  உறுப்பு நாடுகளில் இலங்கையும் முக்கிய அங்கத்துவம்  வகிக்கின்றது சர்வதேச தென்னை தினமானது  உலகளாவிய ரீதியில் செப்டம்பர் 02  ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது  தென்னை உற்பத்தி மற்றும் அளவில் இலங்கை முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச  தென்னை தினத்தை  முன்னிட்டு  இலங்கை  விமானப்படை வேளாண்மை பிரிவினால்  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்  6.5 ஏக்கர் நிலப்பரப்பில் 420 தென்னைமரம்கள்  நடப்பட்டன  இந்த நிகழ்வு கட்டுநாயக்க  படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ்  மார்ஷல்   துய்யகொந்தா  மற்றும் வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுஹர்ஷி  பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்ப்பில் இடம்பெற்றது.

மேலும், கட்டளை வேளாண் பிரிவு 2020 ஆம் ஆண்டில் சுமார் 1500 தேங்காய் நாற்றுகளை மற்ற விமானப்படை நிறுவனங்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை