
முல்லைத்தீவு விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
முல்லைத்தீவு விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் லியனாராச்சிகே கடந்த 2020 டிசம்பர் 19 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் லியனாராச்சிகே அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்கள் கடந்த 2019 அக்டோபர் 01 ம் திகதி முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் வகையில் விமனப்படையினால் செயற்படுத்தப்பட்டுவந்த தனிமைப்படுத்தல் மையமான முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தை வழிநடாத்திவந்தார் .
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் லியனகமகே அவர்கள் இதற்குமுன்னர் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனதிபதி பணிக்குழுவில் செயலாளராக செயற்ப்பட்டுவந்தார்.




