இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறைவை முன்னிட்டு அதிமேதகு ஜனாதியினால் " இரும்பு சிறகுகளின் மகிமை " எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
இலங்கை  விமானப்படையின் 70 வது  வருட நிறைவை முன்னிட்டு  அதிமேதகு ஜனாதியினால்  " இரும்பு சிறகுகளின் மகிமை  " எனும் புத்தகம் கடந்த 2021 மார்ச் 05ம்  திகதி இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டது  வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியினால் ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்ட பின்பு ஜனாதிபதியினால்  சாகச விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் அதிகாரிகள் சமூக ஒன்றுகூடல் கழகத்திற்கு  சென்ற ஜனாதிபதி அவர்கள் விமானப்படையின் 70 வது  வருடத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட  புத்தகத்தினை வெளியிட்டார்.  இதன் முதல்பிரதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்பு  மேல் மாகாண ஆளுநர் , மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் மற்றும் வெளிநாட்டு விமானப்படை தளபதிகள் மற்றும் இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதிகள் ஆகியோருக்கும்  இதன் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இவை அனைத்தும் கொவிட் 19 சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை