
அனுராதபுரம் விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அனுராதபுரம் விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சில்வா கடந்த 2021 ஏப்ரல் 19 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் திஸ்ஸநாயக அவர்களினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் சில்வா அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வவுனியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக எயார் சில்வா அவர்கள் பதவிவகித்தார்
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.










