2022 ம் ஆண்டுக்கான இடைநிலை குத்துச்சண்டை போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான  இடைநிலை குத்துச்சண்டை போட்டிகள்  கடந்த 2022 மே 04  தொடக்கம் 06 வரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த வருடம் 100 மேற்பட்ட போட்டியாளர்கள் தங்களது திறன்களை வெளிக்காட்டினார்

இந்த போட்டிகளின் இறுதி நிகழ்வுகள்  கட்டுநாயக்க விளையாட்டு உடற்பயிற்ச்சி  கட்டிடத்தில் இடம்பெற்றது  புதிய IBA விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் இலங்கையின் குத்துச்சண்டை நடுவர்கள் மற்றும் நீதிபதிகள் சங்கத்தினால் ஆண்களுக்கான 13 எடைப் பிரிவுகள் மற்றும் பெண்களுக்கான 12 எடைப் பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள்  நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்த ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்பை தியத்தலாவ விமானப்படை தளமும் , பெண்கள் அணி சாம்பியன்ஷிப்பைசீனவராய விமானப்படை தளமும் கைப்பற்றியது, முறையே இரண்டாம் இடத்தை ரத்மலான மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளமும் கைப்பற்றியது

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை சுகாதார பிரிவின் வைத்திய பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  லலித் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டுக்குழுவினரும்  கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை