ரதமலான விமானப்படைதளமானது சிறந்த தோட்டம் என்ற கருப்பொருளின்கீழ் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
தற்போது நாட்டில்  நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் விமானப்படை நிறுவனங்களுக்குள் விவசாய திட்டங்களை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதனை முன்னிட்டு மேல் மாகாண விவசாயத் திணைக்களத்தின் (சபை) விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த திருமதி குமாரி சூரியப்பெரும மற்றும் திரு. ரசிக குமாரப்பெரும ஆகிய இரு விவசாய நிபுணர்களால் தொழில்சார் அறிவுப் பகிர்வு செயலமர்வு இயந்திர போக்குவரத்துப் பிரிவு தொங்கு நிலையத்தில் நடத்தப்பட்டது.பங்கேற்பாளர்களுக்கு தகுந்த காய்கறி செடிகளை எவ்வாறு தேர்வு செய்வது, வளர்ப்பது மற்றும் அறுவடை செய்வது மற்றும் அவர்களின் சொந்த உரம் மற்றும் கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கான நுட்பங்கள் குறித்து கற்பிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் "சிறந்த தோட்டம்", "சிறந்த நகர்ப்புற / சிறிய தோட்ட வடிவமைப்பு" மற்றும் "சிறந்த அழகியல் வடிவமைக்கப்பட்ட தோட்டம்" ஆகியவை எதிர்காலத்தில் ஒருபோட்டியாக அமையும் .   அடிப்படையில் ரத்மலானை விமானப்படை தளத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள், நலன்புரி உணவகத்தின் ஊடாக முகாமில் வாழும் பணியாளர்களுக்கு சலுகை விலையில் ஆரோக்கியமான உணவை வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை