தேசிய விளையாட்டு கவுன்சில் புதிய உறுப்பினராக இலங்க விமானப்படை தளபதி நியமனம்
2:57pm on Friday 12th August 2022
இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ ரோஹான் ரணசிங்க அவர்களினால் தேசிய விளையாட்டு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு டோரிங்டன்   தேசிய  விளையாட்டு   கவுன்சில் அலுவலகத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் 10ம் திகதி இடம்பெற்றது

இதன் போது தேசிய விளையாட்டு கவுன்சிலில் புதிய குழு உறுப்பினராக  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவு செய்யப்பட்டார்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள்  பல்வேறு துறைகளிலும் அனுபவம் மிக்கவர்களாக உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் செயல்பட்டவர்களாகும்   எனது நாட்டின் விளையாட்டினை மேலும் மேலும் புத்துணர்ச்சி பெற்று செயல்படுவதற்காக அரும்பெரும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றனர்

 இதன்போது நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்களினால் நமது நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்புக்கள் சட்டதிட்டங்கள் மற்றும் பாடசாலை விளையாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டை என்பவற்றினை மேன்மைப்படுத்தி மேலும் தொழில்நுட்ப ரீதியிலும் விரிவுகளுக்கு தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டது

 இலங்கை விளையாட்டு துறையில் முப்படையினரின் பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் இந்த வருடம் முதல் முதலாக   முப்படை தளபதிகள்  விளையாட்டுக்  கவுன்சில் குழு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை