2022 ம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஆராய்ச்சி கருத்தரங்கு நிகழ்வுகள் ஆரம்பம்
11:31am on Monday 22nd August 2022
2022 ம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின்  ஆராய்ச்சி கருத்தரங்கு நிகழ்வுகள் ஆரம்பம் கடந்த 2022 ஆகஸ்ட் 17ம் திகதி  ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது .

இந்த  நிகழ்வின் முழு நோக்கம்  பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை  விரிவுபடுத்துவது மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சிக் கருத்துகளை ஆராய்வதற்கான சூழலை வளர்ப்பதாகும்.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்  தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் அதிகாரி  மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களால்  பிரதம அதிதி வரவேற்கப்பட்டார் இதன்போது இலங்கையின்  முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான திரு லலித் வீரதுங்கவினால் முக்கிய உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா,  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, , இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மாணவர் அதிகாரிகள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேடட்  அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில்   கல்வியாளர்கள், மூத்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடையே தொடர்பினை  மேம்படுத்துவதற்கு முக்கிய ஊக்கமாக  அமைந்தது ,  தற்போதைய பாதுகாப்பு சிக்கல்கள் பற்றிய அறிவுசார் கருத்துக்களை தொடர்புகொள்வதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும்  சிறந்த பயனுள்ள ஒரு   நிகழ்வாகும்


இக்கருத்தரங்கத்தின் ஊடக கல்வியாளர்களுக்கு  அவர்களின் கல்விப் பாடத்திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புள்ள பல்வேறு கல்விப் பாடங்களில் அவர்களின் அறிவையும் நிபுணத்துவத்தையும் வளர்த்துக்கொள்ளவும், கூர்மைப்படுத்தவும், பரிமாறிக்கொள்ளவும் ஒரு தனித்துவமான மன்றத்தை ஏற்படுத்தியது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை