தரம் 05 புலமை பரீட்சையில் சித்தியடைந்த விமானப்படை அங்கத்தவர்க்ளின் பிள்ளைகளுக்கு கௌரவமளிப்பு நிகழ்வு
9:28am on Monday 5th September 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரனவின்   வழிகாட்டலின்கீழ் விமானப்படை சேவை மற்றும் சிவில் ஊழியர்களின் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது கடந்த  2022 ஆகஸ்ட் 26ம் திகதி  விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  கலந்து கொண்டார்.

இந்த  நிகழ்வில்  2021ஆம் ஆண்டு 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 333 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.  மேலும் அவர்களில், பாதுகாப்பு அமைச்சின் தேசிய பாதுகாப்பு நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "விரு சிசு பிரதீபா" புலமைப்பரிசில் நிதிக்காக 2021 இல் அதிக புள்ளிகளைப் பெற்ற 15 மாணவர்களும், 2019 இல் அதிக புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கான சான்றுதல்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  வழங்கிவைக்கப்பட்டது மேலும் மாணவர்க்ளுக்கு  பணவுதவியும் பாடசாலை உபகாரணம்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

விழாவின் இறுதியில் பரீட்சைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களின் எதிர்கால கல்விக்காக விமானப்படை தளபதி மற்றும் விமானப்படை சேவை பிரிவின் தலைவி வனிதா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வில்  விமானப்படை நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா, விமான செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன, சேவா வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அனைத்து தளங்களின் சேவா வனிதா பிரிவின் இணைப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை