அதிகாரம் பெறாது அதிகாரிகளின் நிர்வாக முகாமைத்துவ பயிற்சி பள்ளியின் 22 ஆவது வருட நிறைவு தினம்
3:23pm on Monday 5th September 2022
 சீனாக்குடா   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் பெறாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ பயிற்சி பள்ளியில் 22 ஆவது வருட நிறைவு தினம் கடந்த 2022 செப்டம்பர் முதலாம் தேதி கொண்டாடப்பட்டது கட்டளை அதிகாரி வின் கமாண்டர் சேனாதிர அவர்களினால் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

 இந்த பயிற்சி பாடசாலையின் ஊடாக  இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட  விமானப்படை வீராங்கனைகள்  மேலும் இராணுவ கடற்படை அங்கத்தவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூலமாக பயிற்சி நெறிகளை பெற்றுள்ளனர் மேலும் வெளிநாட்டு வீரர்களும் இந்த பயிற்சி நெறியினை  பெற்றுள்ளனர்

 இந்த பாடசாலை ஊடாக  சேவை நிர்வாகம் மேலாண்மை தலைமைத்துவ திறன்கள் விலக்காட்சி திறன்கள் பழக்கவழக்கங்கள்  நேற்று மேலும் பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன இந்த பயிற்சி பாடசாலையினால் ரஜரட பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன

 இந்த நிகழ்வினை முன்னிட்டு திருமலை ஸ்ரீ சித்தாந்த வித்தியாலயத்தில் சமூக சேவை   திட்டங்களும் மரம் நடும் நிகழ்வு இடம் பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை