விமானப்படையின் புதிய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி நியமனம்
9:16am on Wednesday 14th September 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  புதிய கமாண்ட் மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக கமாண்ட்   மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஜயசிங்க  அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 08  ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிகழ்வு விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது

இதற்க்கு முன்னர் கமாண்ட்   மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக கடமையாற்றிய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி திசாநாயக்க அவர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் கடமைகளை புதிய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி அவர்களுக்கு உத்தோயோகபூர்வமாக கையளித்தார்  மேலும் முன்னாள் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி அவர்களுக்கு விமானப்படை தளபதி அவர்கள்  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

கமாண்ட் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.ஆர்.ஜெயசிங்க, 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் மோட்டார் போக்குவரத்து மெக்கானிக்காக இணைந்தார் அவர் சிறந்த வாகன பழுப்பார்த்தல் துறையில் சிறந்துவிளங்கியதுடன் இதற்குமுன்னர் சீனவராய விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள அதிகாரம் அல்லாத அதிகாரிகளின்  மேலாண்மை பள்ளியில் வாரண்ட் அதிகாரியகா செயற்பட்டுவந்த்தார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை