12வது ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட சாம்பியன்கள் தேசிய ரீதியான விமானப்படை சாம்பியன் அணியினருக்கும் இலங்கை விமானப்படை தளபதியின் பாராட்டுக்கள்
12:39pm on Tuesday 20th September 2022
கடந்த ஆகஸ்ட் 28 ம்  திகதி  இடம்பெற்ற மஞ்சி  கரப்பந்தாட்ட போட்டிகளில் சாம்பியன் மகுடம்வென்ற இலங்கை விமானப்படை ஆடவர், மற்றும் மகளிர் அணியினர்  இந்த ஆண்டு சாம்பியானான  ஆசிய கிண்ண மகளிர் கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த   ஸ்கொற்றன் ளீடர்  சதுரங்கணி ஜயசூரிய சிரேஷ்ட வான்படை வீராங்கனை ரஷ்மி பெரேரா மற்றும் கட்டுடல் ஆணழகன் மிஸ்டர் ஸ்ரீலங்கா எனும் பட்டம் பெற்ற  சிரேஷட் வான்படை வீரர் சமிந்த பீரிஸ் மற்றும் தேசிய ரீதியில் இலங்கை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்திய  அணைத்து விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022  செப்டம்பர் 14 ம்  திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்திற்க்கு  வரவழைத்து  விருதுகளையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்  

இதன்போது அனைத்து வீரர்களுடனும் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்ட இலங்கை விமானப்படை தளபதி இலங்கையின் தேசிய கோடி மற்றும் இலங்கை விமானப்படையின் கோடி ஆகியவற்றை  உயர்வடையச்செய்த அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்

இதன்போது தேசிய கூடைப்பந்தாட்ட வீராங்கனையான ரஷ்மி பெரேரா அவர்களுக்கு கோப்ரல் நிலை பதவிஉயர்வு  உயர்வுவழங்கிவைத்தார்

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும்  விளையாட்டு வாரிய அங்கத்தவர்கள் அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டனர் 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை