2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வலைப்பந்தாட்ட போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வலைப்பந்தாட்ட  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 21 ம் திகதி கொழும்பு விமானப்படை சுகாதார மேலாண்மை மையத்தில் நடைபெற்றது.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 விமானப்படையின் வலைப்பந்தாட்டக் சம்மேளன தலைவி எயார் கொமடோர் சுரேகா டயஸ், கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர,  கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் இறுதிப் போட்டிகளைக் காண கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை பி ஏக்கல விமானப்படை அணியினர் சீனக்குடா விமானப்படை அணியினரை தோற்கடித்து  சுவீகரித்துக்கொண்டனர் 


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை