59 வது சிரேஷ்ட ஹொக்கி போட்டிகளில் பாதுகாப்பு சேவை அணியினர் வெற்றி
59 சிரேஷ்ட  ஹொக்கி  தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2022  செப்டம்பர் 25ம் திகதி கொழும்பு அஸ்ட்ரா ஹாக்கி மைதானத்தில் நிறைவுக்கு வந்தது இந்த போட்டிகளில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் அணியினர் மெர்கன்டைல் ஹாக்கி அணியினரை  வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்

17 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித்தொடரில்  பாதுகாப்பு சேவைகள் அணியினர் தங்களது விடா முயற்சியின் காரணமாக அரை இறுதி போட்டியில் கொழும்பு  ஹாக்கி அணியினை வீழ்த்தி  இறுதிப்போட்டியில் 04-00 என்ற கணக்கில் மெர்கன்டைல் ஹாக்கி அணியினரை  வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்

இந்த போட்டித்தொடரின் பிரதம அதிதியாக  இலங்கை  ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் திரு.சுரேஷ் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டார்   பாதுகாப்பு சேவை அணியில் 08 விமானப்படை , 07  இராணுவ மற்றும் 03 கடற்படை வீரர்கள் உள்ளடங்குகின்றன இந்த அணிக்கு இலங்கை விமானப்படையை சேர்ந்த கோப்ரல் ரத்னசிறி அவர்கள் தலைமை தாங்கினார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை