விமானப்படை கட்டளை வேளாண்மை ,பிரிவினால் ஆண்டிஅம்பலம விவசாயிகள் சங்கத்திற்கான பால் பதப்படுத்துதல் மற்றும் போன்சாய் கலை பற்றிய சிறப்புப் பட்டறையை வழங்குகிறது.
6:16am on Friday 21st October 2022
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் 2022 அக்டோபர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா படைத்தளத்தில் உள்ள கட்டளை விவசாய பிரிவு ஆண்டியம்பலம கமநல சேவை நிலையத்தின் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பால் உற்பத்தி மற்றும் பொன்சாய் செடிகளை உருவாக்குதல் தொடர்பான விசேட செயலமர்வை நடத்தியது.

அப்பகுதியில் வசிக்கும்  30 விவசாயிகள் மற்றும் இரண்டு வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உதவியாளர்களுக்காண சமூக சேவை திட்டமாக இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.செயலமர்வின் போது வழங்கப்படும் நடைமுறை மற்றும் கோட்பாட்டு அறிவு அவர்களின் சுயதொழில் திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பயிற்சி பட்டறை கட்டளை வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி அதிகாரி குரூப் கப்டன் எரந்திக குணவர்தன அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  அப்பிரிவின் அங்கத்தவர்களினால் இந்த பயிற்சிப்பட்டறை  நடத்தப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை