
இல 07 ம் படைப்பிரிவினால் வானில் இருந்து தரைவழி தாக்குதல் பயிற்சிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது
கடந்த 2022 நவம்பர் 14 மற்றும் 15ம் திகதிகளில் இல 07 ம் படைப்பிரிவினால் பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் 04 தலைமை விமானிகள் மற்றும் 04 வான்வழி துப்பாக்கி வீரர்களுடன் வானில் இருந்து தரைவழி தாக்குதல் பயிற்சிகள் வெற்றிகரமாக கல்பிட்டி விமானப்படை துப்பாக்கி பயிற்சி கடற்க்கரை பகுதியில் இடம்பெற்றது
இந்த துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் விங் கமாண்டர் காஞ்சன லியனாராச்சி, விங் கமாண்டர் சேனக கூரகமுவ, விங் கமாண்டர் லக்ஷித கொலம்பகே மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் நிலங்க குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஒட்டுமொத்த பயிற்சி அமர்வின் கட்டளையா அதிகாரியாக குரூப் கப்டன் சனோஜ் ஜயரத்னவும், முழு பயிற்சியின் பயிற்றுவிப்பாளராக ஸ்குவாட்ரன் லீடர் எரந்த பம்பரந்தவும் செயல்பட்டனர்.