
விமானப்படை ஆடவர் அணியினர் 2022 ம் ஆண்டுக்கான தேசிய நீர்ப்பந்து போட்டித்தொரில் சம்பியன் பட்டத்தை வென்றது
இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் (SLASU) ஏற்பாடு செய்த 2022 ம் ஆண்டுக்கான நீர்பந்துபோட்டிகள் கடந்த 2022 நவம்பர் 18 தொடக்கம் நவம்பர் 20 வரை கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது இந்த தொடரில் இலங்கை விமானப்படை அணியினர் ஆடவர் பிரிவில் தோற்கடிக்கப்படாத அணியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது
பழையன் தோமஸ் கழகத்துக்கு எதிராக களமிறங்கிய இலங்கை விமானப்படை அணியினர் இலகுவாக வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது இந்த நிகழ்வில் நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திரு.நேத்ரு நாணயக்கார மற்றும் இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் தலைவர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.












