2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை செஸ் போட்டிகள்
2:21pm on Wednesday 21st December 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 28 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு  02 நாட்களாக இடம்பெற்றது இந்த போட்டிகள் சுமார் 3 வருடங்களுக்கு பிறகு கொவிட்  தொற்றுநோயினால் இடம்பெறாமல் இருந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை  வளங்கள் பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் நிசங்க திலகசிங்க  அவர்கள் கலந்துகொண்டார்
இந்த வருடம் 100 போட்டியாளர்கள் 17 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்  திறந்த போட்டிகளாக 3+2 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு 41 வீரர்கள் கலந்துகொண்டனர்

ஏக்கல விமானப்படைதள   அணியினர்  ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்

இந்த போட்டியில்  ஒட்டுமொத்த சிறந்த வீரராக  ஸ்கொற்றன் லீடர் ஜயசூரிய அவர்கள் பெற்றுக்கொண்டார்
இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பிரசங்க மார்டினோ மற்றும் விமானப்படை செஸ் போட்டிகள் சம்மேளன தலைவர் குருப் கேப்டன் தம்மிக்க சமரக்கூன்  விமானப்படை விளையாட்டு கவுன்சில்  உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டர்




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை