பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "GEOWEEK 2022" கண்காட்சியில் இலங்கை விமானப்படை பங்குபற்றியது.
2:59pm on Wednesday 21st December 2022
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த  2022 டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற "GEOWEEK 2022" கண்காட்சியில் விமானப்படையை

பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று பங்கேற்றது.சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் ஏற்பாட்டில் கண்காட்சி இடம்பெற்றது.
கண்காட்சியின் கருப்பொருளுக்கு ஏற்ப, தொலைநிலை உணர்தல் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) பயன்பாடுகள் தொடர்பான

விமானப்படையின் தொழில்நுட்ப கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.கூடுதலாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லிஹினியா MkII ஆளில்லா வான்வழி விமானம்  மற்றும்விமானப்படையால் பயன்படுத்தப்படும் DJI Matrice 300 ட்ரோன் காட்சிப்படுத்தப்பட்டது மேலும்  தொழில்நுட்ப ஊழியர்கள் மற்ற அரசாங்க நிறுவனங்களுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையினால்  பயன்படுத்தப்படும் மற்றுமொரு  GIS அமைப்புகளை அறிமுகப்படுத்தபட்டது

இலங்கை விமானப்படை  வான் செயற்பாட்டு பணிப்பகம் , மற்றும் விமான பொறியியல் பணிப்பகம்  , மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகம்  ஆகியவற்றின்  அனுசரணையின்கீழ் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை