புதிய இலங்கை கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
12:40pm on Wednesday 11th January 2023
புதிதாக பதவியேற்ற இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா  அவர்கள் இலங்கை   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2022 டிசம்பர் 28ம் திகதி விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார்

வருகை தந்த புதிய கடற்படை தளபதியினை  கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் சுரேஷ் பெர்ணாண்டோ அவர்களின் தலைமையில் இல 43 வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இலங்கை விமானப்படை தளபதியுடனான  உத்தியோக சந்திப்பு  இடம்பெற்றது இதன்போது  தனது வாழ்த்துக்களை விமானப்பப்படை தளபதி தெரிவித்தார்  மேலும்  ஒன்றிணைந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் கூட்டுப்பயிற்சிகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை