விமானப்படையின் புதிய பிரதி தலைமை தளபதி நியமனம்
10:04am on Thursday 19th January 2023

புதிய விமானப்படை பிரதி தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில அவர்கள் 2023 ஜனவரி 01ம்  திகதி  நியமிக்கப்பட்டார்   நியமன கடிதம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால் விமானப்படை தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது  இதன்போது  விமானப்படை தளபதி  வாழ்த்துக்களை தெரிவித்தார்

எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில கொழும்பு புனித பீற்றர் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவர் ஆவார்அவர் 1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் 19வது அடிப்படை  கேடட்  அதிகாரி  பயிற்சிநெறியில் இணைந்தார் . இலங்கை விமானப்படை சீனக்குடா கல்விப்பீடத்தில்  தனது அடிப்படை மற்றும் மேம்பட்ட நிர்வாக பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர்,  அவர் 1990 இல் பைலட் அதிகாரி தரத்தில் நியமிக்கப்பட்டார்.

அவரது சேவை வாழ்க்கையின் போது, அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றியுள்ளார் மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் 2003/2005 இல் இலங்கை  விமானப்படை  சீனக்குடா கல்விப்பீடத்தில்  கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பணிப்பாக அதிகாரியாக  இருந்தார். மேலும் 2011 ஆம் ஆண்டு விமானப்படைத் தளபதியின் பணியாளர் அதிகாரியாக இருந்த அவர், 2011 பிப்ரவரி 28 முதல் 27 பிப்ரவரி 2014 வரை விமானப்படை  செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்பு  விமானப்படை பொது நிர்வாக பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது விமானப்படை பிரதி தலைமை தளபதியாக  நியமனம் பெற்றுள்ளார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை