
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் செயலாளர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) செயலாளர் நாயகம், இத்தாலிய கடற்படையின் கேப்டன் ரொபர்டோ ரெச்சியா, கடந்த 2023 பெப்ரவரி 13 ம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ கடற்க்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த நிகழ்வை குறிக்கும்வகையில் நினைவுசின்னம்களும் இருதரப்பினருக்கிடையில் பரிமாறப்பட்டது.




