இலங்கை விமானப்படையின் 53வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கட்டுகுருந்தாவில் இடம்பெற்றது
9:03am on Tuesday 16th May 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டல்

 மற்றும் பங்கேற்பில் கட்டுகுருந்த  விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 46வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்  தெபுவன  ஆரம்பப் பாடசாலையில்  கடந்த 2023 மார்ச் 27ம்  திகதி    வெற்றிகரமாக நிறைவு பெற்று கையளிக்கப்பட்டது

பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த ஆரம்பப் பள்ளிக் கட்டிடம், பள்ளியில் பயிலும் சுமார் 157 மாணவர்களுக்கு இனிமையான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் முழுமையாகச் சீரமைக்கப்பட்டது. கட்டிடம் சீரமைக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, விழாவில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கட்டுகுருந்தா     விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது   இந்த நிகழ்வில் கட்டுகுருந்த   விமானப்படை தளத்தின்   கட்டளை அதிகாரி குருப் கேப்டன்அசித்த ஹெட்டியாராச்சி ,மற்றும்  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                       
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை