இலங்கை விமானப்படையின் 54வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் தியத்தலாவயில் இடம்பெற்றது
9:38am on Tuesday 16th May 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் மட்டக்களப்பு   விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 54வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் பி/கஹட்டருப்ப மகா வித்தியாலயத்தில் கடந்த 2023 மார்ச் 31ம் திகதி   வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

சுமார் 600 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. மேலும், கைவிடப்பட்ட சிறுவர் பூங்காவும்  புனரமைக்கப்பட்டு, தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வஜிர சேனாதீரவினால் பி/கஹட்டருப்ப மகா வித்தியாலய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

விமானப்படை சேவை வனிதா பிரிவு மற்றும் விமானப்படை போர் பயிற்சி பள்ளி தியத்தலாவ ஆகியோரின் நிதியுதவியுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் கலந்துகொண்டனர்.  





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை