இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவினால் புகைப்பட சாவடி மற்றும் குளிர் பானங்கள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
11:40am on Tuesday 16th May 2023
கடந்த 2023 ஏப்ரல் 06ம்  திகதி  ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரனவின் அனுசரணையின் கீழ் புகைப்பட சாவடி மற்றும் குளிர்பான விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை அருங்காட்சியகம், இலங்கை விமானப்படையின் சாதனைகளை காட்சிப்படுத்துவது மட்டுமன்றி இளம் மனதையும் ஊக்குவிக்கும் முதன்மையான விமானப்படை முற்றமாகும்.பார்வையாளர்கள் தங்கள் வருகையின் தருணங்களை கேமராவில் படம்பிடிப்பதை அடிக்கடி காணலாம், மேலும் இந்த திட்டம் அருங்காட்சியகத்திற்கு அதிக வெளி பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்கவின் வழிகாட்டுதலின்படி இரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேரா மற்றும் ரத்மலானை விமானப்படை அருங்காட்சியகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சரித் போதிசீல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த முழு திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

ரத்மலானை விமானப்படை தளத்தின் சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷர்மிளா சமரநாயக்க, விமானப்படை சேவை வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை இரத்மலானை விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை