புதிதாக திருமணமான மற்றும் திருமணமாக இருக்கும் இளைஞ்சர் யுவதிகளுக்கான பயிற்சிப்பட்டறை
12:50pm on Tuesday 16th May 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவு, சுகாதார சேவைகள் இயக்குநரகத்துடன் இணைந்து, புதிதாக திருமணமான மற்றும் திருமணமாக இருக்கும் இளைஞ்சர் யுவதிகளுக்கான   ஒரு நாள் பயிற்ச்சி பட்டறையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கடந்த 2023 ஏப்ரல் 27ம் திகதி   ஏற்பாடு செய்தது.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர, பொதுநல பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். விமானப்படை கட்டுநாயக்க, விமானப்படை தளத்தின் தளபதி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் விமானப்படை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி கட்டுநாயக்க, எயார் கொமடோர் நிலுகா அபேசேகர. உற்பட இந்த நிகழ்வில் இதில் புதிதாக திருமணமான விமானப்படை  வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் மற்றும் விமானப்படை   திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள பணியாளர்கள் உற்பட 150 பணியாளர்கள் கலந்துகொண்டனர்
.
கலாநிதி சரத் மண்டலவத்த, பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன, திருமதி பத்ரா உடவத்த, பிரதிப் பரிசோதகர் திரு. ரொஹான் சமரவிக்ரம, திருமதி ரேணுகா ஜயசுந்தர, விங் கமாண்டர் சுசில் பிரேமரத்ன மற்றும் படைத் தலைவர் ஷனக திலகரத்ன ஆகியோர் தமது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட வளவாளர்களாக இருந்தனர். கலந்துரையாடல்  மற்றும் செயல்பாடு சார்ந்த அமர்வுகளும் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை