இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
1:28pm on Tuesday 16th May 2023
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த 2023 மே 01ம்  திகதி கட்டுநாயக்க  பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்தடைந்த்தார்

இலங்கை வந்தடைந்த  இந்திய விமானப்படை தளபதி அவர்கள்  2023 மே 02ம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை  இலங்கை விமானப்படை தலைமையகத்தில் நேரில் சந்த்தித்து கலந்துரையாடினர்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதிக்கு     கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின்  தலமையில்  விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால்  இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு கூட்டு பயிற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புகள் போன்றவை தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னம்களும்  பரிமாறப்பட்டதுடன்  இந்திய விமானப்படை தளபதி அவர்கள்  இலங்கை விமானப்படை  பணிப்பாளர்களையும்  சந்தித்தார்.
                 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை