இலங்கை விமானப்படை இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு ஒத்திகையை நடத்தியது.
3:07pm on Wednesday 24th May 2023
இலங்கை விமானப்படை  தீயணைப்பு மற்றும் மீட்பு   குழுவினரால் கொழும்பு நகரில் இலங்கை மத்திய வங்கி அடுக்குமாடி கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை ஒத்திகை  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 2023 மே 19ம்  திகதி  இடம்பெற்றது

இந்த பயிற்சியில் 30 ம்  மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர் விமானப்படை தலைமை தீயணைப்பு அதிகாரி குரூப் கேப்டன் சஞ்சய் விதான மற்றும் பயிற்சி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சம்மில் ஹெட்டியாராச்சி ஆகியோரின் மேற்பார்வையில் பயிற்சி நடைபெற்றது.

இங்கு விமானப்படை தீயணைப்பு வீரர்கள் ஆயத்தம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு உயரமான இடத்தில் இருந்து கீழே இறங்கி மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கயிறுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சியின் முதன்மை நோக்கம், அவர்களின் திறன்களைப் புதுப்பிப்பதன் மூலம் மறுமொழி நேரத்தைக் குறைப்பதாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை