கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மருத்துவ மனையினால் "உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
9:28am on Wednesday 7th June 2023
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மருத்துவ மனை மற்றும் பல் மருத்துவமனை ஆகியன இணைந்து  " உணவை வளர்ப்போம் புகையிலை வேணாம் " எனும் தொனிப்பொருளில் கீழ்  உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த 2023 மே 31ம்  திகதி கொண்டாடப்பட்டது  

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பட்டிமன்றம், சுவரொட்டி பிரச்சாரம் மற்றும் தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. கட்டுநாயக்க வைத்தியசாலை கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் (டாக்டர்) என்.டி.பி அபேசேகர மற்றும் பல் வைத்திய பிரிவின் கட்டளை அதிகாரி கட்டுநாயக்க, எயார் கொமடோர் (டாக்டர்) ஜே.பி.டபிள்யூ ஜயவிக்ரம ஆகியோரால் இந்த அமர்வு வழிநடத்தப்பட்டது.

வாய்வழி புற்றுநோய்கள், சமூக-பொருளாதார மற்றும் உளவியல் சிக்கல்கள், புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு தொடர்பான ஊட்டச்சத்து பிரச்சினைகள் மற்றும் நிறுத்தும் முறைகள் ஆகியவை பிரதான தலைப்புகளாக வலியுறுத்தப்பட்டன.

புகையிலை இல்லாத வாழ்க்கையின் மதிப்பை சமூகத்திற்கு உணர்த்துவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை