2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை குத்துசண்டை போட்டிகள்
9:41am on Wednesday 7th June 2023
விமானப்படை தளங்களிக்கிடையிலான  வருடாந்த இடைநிலை குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 2023 மே  30 முதல் ஜூன் 02 வரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டியில் சுமார் 110ம் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் இதன்போது பல திறமையான வீரர்கள் இனம்காணப்பட்ட்டனர் இறுதிப்போட்டியில் பரிசளிப்புவிழா  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றது

புதிய IBA விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் இலங்கையின் குத்துச்சண்டை நடுவர்கள் மற்றும் நீதிபதிகள் சங்கத்தினால் ஆண்களுக்கான 13 எடைப் பிரிவுகள் மற்றும் பெண்களுக்கான 12 எடைப் பிரிவுகளின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது

இதன்போது ஒட்டுமொத்த ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்பை ரத்மலான விமானப்படை தளமும்  மற்றும் பெண்கள் அணி சாம்பியன்ஷிப்பை சீனக்குடா விமானப்படை கலவிபீடமும் பெற்றுக்கொண்டது இரண்டாம் இடத்தினை முறையே சீனக்குடா மற்றும் கொழும்பு  விமானப்படை தளங்கள் ஆகியன ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இறுதி அமர்வை காண விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பிற அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை