
விமானப்படையினால் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலைக்கு 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான விசேட நன்கொடைகள் கடந்த 2023 ஜூன் 03 ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது இதன் நோக்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான மற்றும் உகந்த பராமரிப்பை வழங்குவதாகும்.















