கட்டுநாயக்க விமானப்படை தளத்திலமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவின் 20 வது வருட நிறைவு
கடந்த 2023 ஜூன் 13ம் திகதி கொண்டாடப்பட்டது . விமானப்படை தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி இலங்கை விமானப்படை மற்றும் அரச துறையில் அனைத்து முக்கிய கட்டுமான மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த  படைப்பிரிவு  நிறுவப்பட்டது.

தற்போது, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 1400க்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியரிங் அதிகாரிகள் மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு பிரிவுகளில் வான்படை வீரர்களும்  உள்ளனர்.
 
20வது  வருட நிறைவை முன்னிட்டு  பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில்  காலை அணிவகுப்பு பரீட்சணையுடன்  அனைவரின் பங்கேற்பில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை கட்டுநாயக்கா தளத்தின் பதில் கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் எஸ்.ஆர்.உடகுபுர அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை