சர்வராத்திரி பிரித் வழிபாடுகள்
12:51pm on Friday 23rd June 2023
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் பணிப்புரையின் பேரில், இலங்கை விமானப்படையின் போர்வீரர்  நினைவுதினத்தை  முன்னிட்டு  வருடாந்த சர்வராத்திரி  பிரித்  நிகழ்வு கடந்த 16 ஜூன் 2023   ஏக்கல விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையின் கீழ், ஏகல விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன மார்டினோ அவர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பிங்கம், விமானப்படை மற்றும் முழு தேசத்தின்.

உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற போர்வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சேவையாற்றும் பணியாளர்களை ஆசிர்வதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால்  "கரடுவ" தாது  ஏக்கல விமானப்படை தளத்தில்   விமானப்படையினருக்கான சிற்றுண்டிச்சாலையில் அலங்கரிக்கப்பட்ட பிரித் மண்டபத்தில்    அழகிய ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

இதன்போது விமானப்படை தலைமை அதிகாரி,பணிப்பாளர்கள் மற்றும் , விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியின் கட்டளைத்அதிகாரி அனைத்து தொழிற்பயிற்சி அதிகாரிகள்  குறிப்பாக உயிரிழந்த போர்வீரர்களின் அன்பான குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை