விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு.
3:30pm on Sunday 25th June 2023
அந்த அடிப்படையில் இதன் முதல் அங்கமாக துரதிஷ்டவசமாக 2010 ஏப்ரல் 21ஆம் திகதி மரணமடைந்த கோப்ரல் ஜினதாச B.K.C.P.க்கு புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, 2023 ஜூன் 19ஆம் திகதி மொரகஹஹேன, மில்லவ பிரதேசத்தில் புதிய வீடு ஒன்று உத்தியோகபூர்வமாக குடும்ப உறுப்பினர்களுக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன  அவர்களினால் கையளிக்கப்பட்டது.  

இந்த திட்டமானது விமானப்படை சேவை வனிதா பிரிவினால் நிதியளிக்கப்பட்டதுடன், ரத்மலானை விமானப்படை தளத்தில் உள்ள திறமையான குழுவினரால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்கவின் பணிப்புரையின் பேரில் ரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேராவின் மேற்பார்வையின் கீழ் முழு திட்டமும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

ரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, இரத்மலானை விமானப்படை தளத்தின் சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி ஷர்மிளா சமரநாயக்க, விமானப்படை சேவை வனிதா பிரிவின் செயலாளர், விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ,  சேவை வனிதா பிரிவின் ஊழியர்கள், அதிகாரிகள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை