எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜெயசிங்க இலங்கை விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
5:10pm on Tuesday 11th July 2023
எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க இலங்கை விமானப்படையிலிருந்து 35 வருடகால அர்ப்பணிப்பு சேவையின் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் போது, இலங்கை விமானப்படையின் போரொயியல் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்தார்.2023 ஜூலை 06ம் திகதி   உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வு  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசத்திற்கும் குறிப்பாக இலங்கை விமானப்படைக்கும் அவர் பல வருடங்கள் ஆற்றிய சேவைக்காக விமானப்படைத் தளபதியால் அவர் பாராட்டப்பட்டார். எங்கள் தாய்நாட்டிற்கு தேவைப்படும் காலங்களில் அவர் ஒரு முக்கிய பங்காற்றினார் என்றும் அவரது புகழ்பெற்ற வாழ்க்கை விமானப்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்றும் விமானத் தளபதி வலியுறுத்தினா இதன் போது விமானப்படை தளபதி மற்றும் எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க ஆகியோருக்கு இடையில் நினைவு பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், அவர் கடைசியாக விமானப்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 07 ஜூலை 2023 அன்று இலங்கை விமானப்படையின் வண்ணப் பிரிவினால் அவருக்கு சம்பிரதாய மரியாதை வழங்கப்பட்டது.

எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க 1988 மே 17 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் 19 ஆவது கேடட்டாக இணைந்தார். 1990-ம் ஆண்டு தொழில்நுட்பப் பொறியியல் பிரிவில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் சீனக்குடா விமானப்படை  அகாடமியில் அடிப்படை போர் பயிற்சி, அடிப்படை நிர்வாக பாடநெறி, கிளை பயிற்சி மற்றும் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி  ஆகியவற்றில் பயின்றார் மற்றும் நல்ல கல்வி பின்னணியுடன் சிறந்த அதிகாரியாக இருந்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை