இலங்கை விமானப்படையின் வருடாந்த கிறிஸ்தவ ரணவிரு நினைவுதின நிகழ்வுகள்
1:54pm on Monday 17th July 2023
நாட்டிற்காக உயிர்நீத்த போர்வீரகளை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவ  மத வழிபாடுகள்  கடந்த 2023 ஜூலை 11ம்  திகதி  புனித மெரி தேவாலயத்தில்   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் , விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவ மதகுருமார்களினால் இதன்போது விமானப்படைக்கான  தெய்வ ஆராதனைகள் மற்றும் பிராத்தனைகள் இடம்பெற்றதுடன்  வரவேற்புஉறை  எயார் கொமடோர் செனவிரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது   விங் கமாண்டர்  ருவன் குணவர்தன அவர்களினால் புனித வேதநூல் வாசிக்கப்பட்டதுடன்  சிங்கள மொழிமூலம்  ஸ்கொற்றன் ளீடர்  விக்ரமசிங்க அவர்களும்  தமிழ் மொழிமூலம்  வாரென்ட் அதிகாரி ராஜ்குமார் அவர்களும்  வாசித்தனர்.


இதன்போது  சீனக்குடா விமானப்படை  கல்விப்பீடம் உற்பட அனைத்து விமானப்படை கொடிகளும்  ஆசிர்வதிக்கப்பட்டன.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை