வருடாந்த விமான போக்குவரத்து பாதுகாப்பு சுவரொட்டி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
4:33pm on Tuesday 25th July 2023
விமானப்படை பாதுகாப்பு சுவரொட்டி போட்டி விருது வழங்கும் விழா 2023 ஜூலை 18ம்  திகதி விமானப்படை தலைமையகத்தில் விமான பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எயார் கொமடோர் அமல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  அவர்கள் பிரதம அதிதியாகக் பரிசில் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டார்,  இதன்போது போட்டியில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

14வது வருடாந்த ஏவியேஷன் பாதுகாப்பு சுவரொட்டி போட்டியானது 72வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுடன் விமானப்படையின் அனைத்து தரவரிசைகளிலும் விமானப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.13 இறுதிப் போட்டியாளர்கள் ஒரு நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 3 இறுதிப் போட்டியாளர்கள் தலைமைப் பணியாளர்களால் தீர்மானிக்கப்பட்டனர். 1வது மற்றும் 02வது ,03வது இடங்களை முறையே பிளைட்  சார்ஜென்ட் காரியவசம் ,  கோப்ரல் கருணாரத்ன  மற்றும் எயார் கொமடோர்  போதிசீல ஆகியோர் பெற்றனர். மீதமுள்ள 10 வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை