
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தனது பதவிக்கால அட்டையை வெளியிட்டார்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 2023 ஜூலை 31 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸை சந்தித்தார்.
துணைவேந்தர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கு இடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், இவ்விழாவை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினவுசின்னக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பழைய மாணவரான எயார் மார்ஷல் உதேனி
ராஜபக்ஷ அவர்கள் தேசத்தின் பெயரால் உயர்ந்த தியாகத்தை செய்த ஆயுதப்படை வீரர்களின் துணிச்சலான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக புதல்வர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவேந்தலுக்குப் பிறகு, விஜயத்தை நிறைவு செய்யும் வகையில், எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, புகழ்பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில், பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டார் .











