இலங்கை விமானப்படை தளபதி இலங்கை போலீஸ் மா அதிபரை சந்தித்தார்
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய விமானப்படைத் தளபதிக்கு இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மரியாதை செலுத்தப்பட்டதுடன், விமானப்படைத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட  புதிய விமானப்படை தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்துக்களை  தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை