
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் 08வது ஆண்டு நிறைவுதினம்.
கட்டுநாயக்கா இலங்கை விமானப்படைத் தளத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு கடந்த 05 ஆகஸ்ட் 2023 அன்று தனது 8வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இலங்கை விமானப்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புத்தாக்கம் மற்றும் உள்ளூர் அபிவிருத்தியை முன்னின்று ஊக்குவிக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு நிறுவப்பட்டது.
படைப்பிரிவு வளாகத்தில் நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியுடன் ஆரம்பமான தின விழாவானது விமானப்படை தள ரெஜிமென்டல் விளையாட்டு மைதானத்தில் படைப்பிரிவு அங்கத்தவர்கள் அனைவரின் பங்கேற்பில் நட்புறவு கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. வருடாந்த நிகழ்வுடன் இணைந்து 2023 ஓகஸ்ட் 03 ஆம் திகதி "கட்டுநாயக்க லக்ஷ்மி அனாதை இல்லத்தில்" அனைத்து அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் மற்றும் அன்னதானமும் இடம்பெற்றது.
படைப்பிரிவு வளாகத்தில் நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியுடன் ஆரம்பமான தின விழாவானது விமானப்படை தள ரெஜிமென்டல் விளையாட்டு மைதானத்தில் படைப்பிரிவு அங்கத்தவர்கள் அனைவரின் பங்கேற்பில் நட்புறவு கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. வருடாந்த நிகழ்வுடன் இணைந்து 2023 ஓகஸ்ட் 03 ஆம் திகதி "கட்டுநாயக்க லக்ஷ்மி அனாதை இல்லத்தில்" அனைத்து அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் மற்றும் அன்னதானமும் இடம்பெற்றது.













