முல்லைத்தீவு விமானப்படை தளம் கண் சிகிச்சை திட்டத்தை நடத்துகிறது
முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தின் 12வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, பொதுமக்களுக்கான கண் மருத்துவ மனை மற்றும் வாசக கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி 09 ஆகஸ்ட் 2023 அன்று நடத்தப்பட்டது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (முதல்வர்) லலித் ஜயவீர மற்றும் விமானப்படை முல்லைத்தீவு முகாமின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் லக்மால் ஜயதிலக ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வையிட்டனர். கிளினிக் மூலம் 175 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ வசதிகளைப் பெற்றனர்.

குரூப் கப்டன் டாக்டர் அபேயசேகர,  தலைமையில் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள்  மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பக அதிகாரிகள் , கொழும்பு விமானப்படை வைத்தியசாலை மற்றும் ஏகல தொழிற்பயிற்சி பாடசாலை ஊழியர்கள்,  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர்கள் ஆகியோரின் பங்கேற்பில் இந்த கண் வைத்தியம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை