
பாக்கிஸ்தான் உயஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியயை சந்தித்தார்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை 23 ஆகஸ்ட் 2023 அன்று விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான பயிற்சி வாய்ப்புகளை ஆராய்தல் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் அடையாளமாக விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையில் நினைவு பரிசுப் பரிமாற்றம் நடைபெற்றது.