
இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் கௌரவ மியோன் லீ அவர்கள் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவைச் சந்தித்தார்.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.



