
2023 ம் ஆண்டுக்கான ரக்பி இடைநிலை போட்டிகள்
2023ம் ஆண்டுக்கான ரக்பி இடைநிலை போட்டிகள் கடந்த 2023 ஒக்டோபர் 13ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் கொழும்பு விமானப்படை ரக்பி அணி 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் சம்பியனாக பட்டத்தை வென்றது,ரத்மலான விமானப்படை தளம் இரண்டாமிடத்தை பெற்றது. மகளிர் பிரிவில் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய அணியினர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை தரைவழி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் இலங்கை ரக்பி சம்மேளன தலைவர் குரூப் கப்டன் நளின் டி சில்வா (ஓய்வு), கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிஎஸ்என் பெர்னாண்டோ, விமானப்படை தளத்தளபதி எயார் கொமடோர் டபிள்யூபிஏஎச் பெரேரா மற்றும் ஏனைய சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை தரைவழி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் இலங்கை ரக்பி சம்மேளன தலைவர் குரூப் கப்டன் நளின் டி சில்வா (ஓய்வு), கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிஎஸ்என் பெர்னாண்டோ, விமானப்படை தளத்தளபதி எயார் கொமடோர் டபிள்யூபிஏஎச் பெரேரா மற்றும் ஏனைய சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.





















