
தீவிர சிகிச்சை மற்றும் விரைவான தலையீடு ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பயிற்சி திட்டம்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (திரு) லலித் ஜயவீர அவர்களின் வழிகாட்டலின் கீழ், இலங்கை தேசிய வைத்தியசாலையுடன் இணைந்து 2023 அக்டோபர் .11 திகதி அன்று, சுகாதார சேவைகள் பணிப்பகம் இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமில் அவசர தீவிர சிகிச்சை மற்றும் விரைவான பதிலளிப்பு ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது.








கொழும்பு விமானப்படை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் சுஜீவ அல்விஸ் மற்றும் விமானப்படை வைத்தியர்களான விங் கமாண்டர் ஷிரான் ராஜகருணா, விங் கமாண்டர் சசிரு மதுரவல, ஸ்கொற்றன் ளீடர் கல்ப பண்டார மற்றும் ஸ்கொற்றன் ளீடர் இஷான் தி சில்வா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த பயிற்சி வகுப்பு இடம்பெற்றது.







