
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விமானப்படை போர்வீரர்களுக்கான நினைவேந்தல் மாதவழிபாடுகள்.
தாய்நாட்டிற்காக தன்னுயிர் நீத்த விமானப்படை போர்வீரர்கள் மற்றும் தற்போது சேவையில் உள்ள விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பௌத்த மத வழிபாடுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த 2023 அக்டோபர் 22 மற்றும் 23ம் திகதிகளில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த பௌத்த சமய நிகழ்வை விமானப்படை நலன்புரி பணிப்பகம் ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த பௌத்த மத விழாவின் முதல் நாளான 22 அக்டோபர் 2023 அன்று மாலை கிளன்பச பூஜையும் 02ம் நாள் ஏனைய வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. இனோகா ராஜபக்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த பௌத்த சமய நிகழ்வை விமானப்படை நலன்புரி பணிப்பகம் ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த பௌத்த மத விழாவின் முதல் நாளான 22 அக்டோபர் 2023 அன்று மாலை கிளன்பச பூஜையும் 02ம் நாள் ஏனைய வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. இனோகா ராஜபக்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.















































