இலங்கை விமானப்படை வைத்தியசாலை கட்டுநாயக்க முப்படைகளின் தாதியர் உதவியாளர்களுக்கான பிசியோதெரபி டிப்ளோமா திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சுகாதார சேவைகள் இயக்குநரகத்தினால் இலங்கை ஆயுதப்படை தாதி உதவியாளர்களுக்கான பிசியோதெரபி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 23 ஒக்டோபர் 2023 அன்று கட்டுநாயக்க விமானப்படை தள வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர அவர்களினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பயிற்சி பணிப்பாளர் எயார் கொமடோர் அனுருத்த விஜேசிறிவர்தன,பதில் முகாம் கட்டளைத் தளபதி குரூப் கப்டன் அஷாத் லியனாராச்சி மற்றும் கட்டுநாயக்க விமானப்படை வைத்தியசாலையின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் வசந்த பத்மபெரும ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினர்.

பிசியோதெரபி டிப்ளோமா என்பது ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட இரண்டு வருட முழுநேர பயிற்சி டிப்ளோமா திட்டமாகும், மேலும் டிப்ளோமா திட்டத்தின் முதல் தொகுதியாக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 14 தாதியர் உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை