'6வது ரேஸ் தி பேர்ல்' சர்வதேச உயர் சகிப்புத்தன்மை சைக்கிள் ஓட்டுதல் தனி நிகழ்வில் இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டுநர் ஒரு புதிய சாதனை

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி பெதுருதுடுவவில் இருந்து டிக்வெல்ல வரை நடைபெற்ற '6வது ரேஸ் தி பேர்ல்' சர்வதேச உயர் சகிப்புத்தன்மை சைக்கிள் ஓட்டப் பந்தயத்தின் ஆண்களுக்கான தனிப் போட்டியில் இலங்கை விமானப்படையின் சைக்கிள் ஓட்டுதல் சம்பியன் கப்டன் எயார்மேன் நமரத்ன வெற்றி பெற்றார்.  சராசரியாக மணிக்கு 30.95 கிமீ வேகத்தில் 19 மணி நேரம், 22 நிமிடங்கள் மற்றும் 36 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்தார்.

ஆடவர் குழு தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட விமானப்படை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டுதல் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அவர்கள் நிகழ்வை 17 மணி 43 நிமிடம் 15 வினாடிகளில் முடித்திருந்தனர்.

"ரேஸ் தி பேர்ல்" என்பது திரு. யசாஸ் ஹவாகே தலைமையிலான ஒரு சர்வதேச உயர் சகிப்புத்தன்மை சைக்கிள் ஓட்டுதல் ஆகும். பேதுருதுடு தொடக்கம் திக்வெல்ல வரையிலான 624 கிலோமீற்றர் தூரம் இடைநில்லாது இந்தப் போட்டி நடைபெற்றது. இலங்கை, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், மெக்சிகோ மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை