
சீனாவில் இலங்கை விமானப்படையினால் கொள்முதல் செய்யப்பட்ட Y -12 ரக விமானம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
விமானப்படையின் விமான போக்குவரத்து சக்தியை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாபதி அவர்களின் ஆலோசனைப்படி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின்கீழ் விமானப்படையின் இல 08 போக்குவரத்து படைப்பிரிவிற்கு Y -12 ரக விமானிகள் 02 `சீனா அரசிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ரக விமானங்கள் அடிப்படையாக பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கும் மனிதாபிமான நடவடிக்கையின்போது வீரர்களின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது தற்போது இந்த விமானங்கள் வான் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கிகள் மற்றும் பாராசூட் வீரர்களின் பயிற்சிகளுக்கும் யுத்த பயிற்சிகளுக்கும் உள்நாட்டு பொக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமிதபண்டார தென்னகோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலாக பிரதானியுமான கௌரவ சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு ) கமால் குணரத்ன , இலங்கை கடற்படை தளபதி மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்
























